TNPSC குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது குரூப் 1,2 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து வகையான போட்டி தேர்வுகளும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதையடுத்து தற்போது இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இதில் குறிப்பிட்டபடி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழக அரசின் சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 67 வகையான பதவிகளுக்கான குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு மூலமாக 5,529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கான தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மேலும் சில தேர்வுகளுக்கு தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!
இதில் தெரிவித்துள்ளதாவது, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடத்திற்கான குரூப் 1 தேர்வின் முடிவுகளும் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்றவியல் உதவி வழக்கறிஞர் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகளும் ஜூலை மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 1 பணியிடத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கான சான்றிதழ்கள் பதிவேற்றம் வருகிற 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.