தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

0
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் இன்று (ஜூன் 24) முதல் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் சூழலில் மத்திய அமைச்சரவை சமீபத்தில் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தது. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு நோய் பரவல் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்வடைந்து தற்போது 1000ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை சுமார் 124 நாட்களுக்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பாதிப்பின் இந்த அதிரடி உயர்வு பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திற்கும் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,063 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பதாகவும், அதில் சென்னையில் மட்டும் 497 பேருக்கு புதிய தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இது தவிர கோவை மாவட்டத்தில் 50 பேருக்கு நோய் தொற்று பதிவாகி இருக்கிறது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொது மக்கள் அனைவரும் மீண்டுமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இதை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுத்துறை அரசு துணைச்செயலாளர் எஸ்.அனு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் ஆகும். அதனால், சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் 24-6-2022 முதல் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. இதனுடன் அலுவலகங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!