CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் கடந்த கல்வியாண்டில் தொற்று பாதிப்பு அச்சத்தால் நேரடி முறையில் வகுப்புகளை நடத்த முடியாத சூழல் உருவானது. அதனால் கடந்த வருடம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதன் பிறகு அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
மாநில பள்ளிகளை தொடர்ந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் CBSE பள்ளிகளிலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி கடந்த 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் கட்ட பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் 50 சதவீதப் பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெற்றது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தயாராகினர். இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஜாக்பாட்- கல்வித்துறை முக்கிய உத்தரவு!
இரண்டு கட்ட பொதுத்தேர்வுகளும் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வின் முடிவுகளை மாணவர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டதாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.