தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஜாக்பாட்- கல்வித்துறை முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஜாக்பாட்- கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஜாக்பாட்- கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஜாக்பாட்- கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தமிழகத்தில், பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக நிரப்பப்படும் இடைநிலை/ பட்டதாரி/ முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் தற்காலிக நியமனங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழக பள்ளிக்கல்வித் துறை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல விதமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த வகையில் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும், தொடக்கப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை வலுப்படுத்தும் விதமாகவும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர்கள்/ மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை 8 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

TRB மூலம் நேரடி நியமனங்கள் மேற்கொள்வதற்கும், பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப சில காலம் ஆகக்கூடும் என்பதால் இந்த முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும், 8 மாதத்திற்குள் பதவி உயர்வு மூலமாகவோ, நேரடி நியமனம் மூலமாகவோ, பணி மாறுதல் மூலமாகவோ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், பள்ளி மேலாண்மை குழு மூலம் அந்தந்த பள்ளிகளில் நிரப்பப்பட ஆசிரியர்கள் உடனடியாக பணி விடுப்பு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் ரூ.40,000 சம்பளத்தில் சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

1. பள்ளி மேலாண்மை வாயிலாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 மதிப்பூதியம்

2. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 மதிப்பூதியம்

3. முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 மதிப்பூதியம்

4. பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

5 அவ்வாறு இல்லையென்றால் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

6 அவ்வாறே, முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

7 அவ்வாறு இல்லையென்றால் இல்லம் தேவி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!