டெலிகிராம், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கை – பண மோசடி அதிகரிப்பு!
சமூக வலைத்தளங்களில் வரும் லிங்குகளை ஆர்வத்தில் கிளிக் செய்து பண மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை எச்சரிக்கை:
தமிழக காவல்துறையினர் அடிக்கடி சமூக விழிப்புணர்வு சார்ந்த எச்சரிக்கை அறிக்கைகளை வெளியிட்டு வருவார்கள். வங்கி விவரங்கள், ஆதார் விவரங்கள், உங்கள் தனிப்பட்ட முகவரி, மொபைல் போன் OTP போன்ற பலவற்றையும் வைத்து மோசடி வேலைகள் நடந்து வருகின்றது. அந்த வகையில், தற்போது சென்னை தாம்பரம் காவல்துறை சார்பில் புதிய எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜுன் 2 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதில், டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் வரும் எந்த தேவையற்ற லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், பகுதி நேர வேலைவாய்ப்பு என்று கூறி உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் வரும் டெலிகிராம் லிங்கில் 20 டாஸ்குகள் முடித்தால் பணம் என்று உங்களை நம்ப வைத்து, டாஸ்குகளை முடித்த பின்னர் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றி விடுவார்கள். இதனால் இது போன்ற மோசடி சம்பவங்களை கருத்தில் கொண்டு தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download