தமிழகத்தில் ஜுன் 2 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜுன் 2 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜுன் 2 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜுன் 2 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் ஜூன் இரண்டாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். மேலும், வைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் இரண்டாம் தேதி முதல் ஜூன் மூன்றாம் தேதி காலை வரை கடைபிடிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு ஊர்களில் இருந்தும் எக்கச்சக்கமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வருவர்.

குணசேகரன்-அரசுக்கு இடையில் முற்றும் சண்டை – எதிர் நீச்சலில் என்ன நடக்க போகுது பாருங்க!

இதனால், ஜூன் இரண்டாம் தேதி முழுவதுமே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக வாகனம் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள் மற்றும் கோவில் வளாக சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வைகாசி விசாக விழாவையொட்டி வரும் ஜூன் இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு கட்டும் விதமாக வரும் ஜூன் 10ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!