தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?

தமிழகத்தில் உள்ள தவறுதலாக ரேஷன் கார்டை தொலைத்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டியவை குறித்த விவரங்களை முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ரேஷன் கார்டு:

தமிழ் நாடு அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் மையமாக வைத்து தமிழக அரசு நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது.அதில் முக்கியமானதாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் மற்றும் ஒரு போன்ற இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது இந்தியரசு. அதன் படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 69 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்கள் திடீரென தங்களது ரேஷன் கார்டுகளை தொலைத்து விட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா உடனே ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழே விவரமாக பார்ப்போம். தொலைத்தவர்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் இந்த வேலையை வெறும் 20 நிமிடத்தில் முடித்து விடலாம். அதற்கான படிகளாக, 1. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான அதன் பின்னர் https://www.tnpds.gov.in/ சென்று லாகின் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, இப்போது பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.

Infosys நிறுவனத்தில் 50000+ பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் திட்டம்! இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். மேலும் இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் அதில் தங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அடுத்தாக, தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!