Infosys நிறுவனத்தில் 50000+ பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் திட்டம்! இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
இன்ஃபோசிஸ் நிறுவனம் வரும் நிதியாண்டில்ட 50,000க்கும் மேற்பட்ட அனுபவம் இல்லாத (Fresher’s) இளைஞர்களை பணியமர்த்த முடிவெடுத்துள்ளதாக அந்த நிறுவன தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா அலை தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. மக்கள் பலரும் தங்களின் வேலையை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நேரத்தில் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது மத்திய மாநில அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அரசு துறையை தொடர்ந்து தனியார் துறைகளும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் வரும் நிதியாண்டில் 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. அந்நிறுவனத்தின் 2022 நிதியாண்டில், நிறுவனத்தின் டிஜிட்டல் சந்தையின் மதிப்பு 41.2% அதிகம் இது,கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 38.8 சதவீத வளர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2022 நிதியாண்டில் மட்டும் 85,000 அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார்.
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம்? வலுக்கும் கோரிக்கை! TRB முடிவு என்ன?
இதில், இந்தியாவில் மட்டும் 54,30 பேர் உள்ளனர். வரும் நிதியாண்டில், 50000 க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அனுபவமிக்க விண்ணப்பதாரர்களை விட, புதியவர்களை பணியமர்த்துவதில் தற்போது ஐடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2022 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் அனுபவம் இல்லாத இளைஞர்களை 30% பணியமர்த்தி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.