மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை? விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு கடந்த 18 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைவில் விடுவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA நிலுவைத்தொகை
கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் சலுகையான அகவிலைப்படி (DA) தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 தவணைகளாக அதாவது 18 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி தொகை எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த தொகை இன்னும் அரசு ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பதால் அவர்கள் DA நிலுவைக்கான கோரிக்கையை அரசுக்கு முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை வழங்க ஆலோசித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது, 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இது குறித்த தகவலின்படி, DA நிலுவைத் தொகையை ஒரே முறையாக செலுத்துவது குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெறும் என்று சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அப்படி நடந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத் தொகை 2 லட்சம் ரூபாய் வரை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைய உள்ளனர்.