தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு – அரசின் அதிரடி முடிவு என்ன?
சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங் நகரில், ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு:
கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூகான் நகரில் முதன் முதலில் பரவியது. மேலும் இந்த வூகான் நகரம் அதிக பேரழிவை சந்தித்து. கொரோனா வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தொற்று பாதித்த நாடுகளில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.
முடிவுக்கு வரும் உக்ரைன் – ரஷ்யா போர்? பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை! உலக நாடுகள் எதிர்பார்ப்பு!
இருப்பினும் மீண்டும் கொரோனா, ஓமைக்ரான் என்ற புதிய வகைகளில் உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங் நகரில், ஒமைக்ரான் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் ஹாங்காங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் தொற்று, கொரோனாவை விட அதிகம் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகளும் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழ், சரஸ்வதியை வீட்டிற்கு வர சொன்ன கோதை, தவிடுபொடியான சந்திரகலாவின் திட்டம் – ப்ரோமோ ரிலீஸ்!
இந்த நிலையில் ஹாங்காங் பல்கலைக்கழகம் ஆய்வின் படி, வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் ஹாங்காங்கில் கொரோனா ஐந்தாவது அலை உச்சமடைந்து தொடும் என்று தெரியவந்துள்ளது. கொரோனா 5வது அலை தீவிரமடையும் போது தினசரி பாதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அபாயத்தை கட்டுப்படுத்த ஹாங்காங் நகரம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் அடிப்படையில் நோய் தொற்று தாக்கத்தை குறைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.