தமிழ், சரஸ்வதியை வீட்டிற்கு வர சொன்ன கோதை, தவிடுபொடியான சந்திரகலாவின் திட்டம் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், கோதை குடும்பத்தை கலைக்க சந்திரகலா பல திட்டங்களை தீட்டுகிறார். பின் கோதை குணமடைந்து வீட்டிற்கு வர தமிழை வீட்டிற்கு வரவழைக்க சந்திரகலா அதிர்ச்சி அடைகிறார்.
தமிழும் சரஸ்வதியும்:
“தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழ் சரஸ்வதி திருமணத்திற்கு பின் கோதை உடல்நிலை சரி இல்லாமல் போனதால் குடும்பமே வருத்தத்தில் இருக்கிறது. அதனால் குடும்பத்திற்கு இடையே இருக்கும் விரிசலை அதிகப்படுத்த பல ஏற்பாடுகளை சந்திரகலா செய்கிறார். அதனால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே பல பிரச்சனைகள் வருகிறது. தமிழும் கார்த்திக்கும் அடித்துக் கொள்வதை பார்த்து கோதை வருத்தப்படுகிறார். தமிழின் அப்பா கூட தமிழ் மீது கோவமாக இருக்கிறார்.
இந்நிலையில் குடும்பம் பிரிந்துவிட்ட சந்தோஷத்தில் சந்திரகலா இருக்க அப்போது கோதை மருத்துவமனையில் இருந்து மீண்டு வருகிறார். அவர் வீட்டிற்குள் வந்ததும் தமிழும் சரஸ்வதியையும் வர சொல்லுங்கள் என சொல்கிறார். அதை கேட்டு தன்னுடைய திட்டம் எல்லாம் வீணாகியதை நினைத்து சந்திரகலா அதிர்ச்சி அடைகிறார். பின் அவர்கள் எதற்கு இங்கே என கேட்க, அவர்கள் இங்கே தான இருக்க வேண்டும் என சந்திரகலா சொல்கிறார்.
பின் தமிழும் சரஸ்வதியும் வாசலில் நிற்க வசு சென்று ஆரத்தி எடுக்கிறார். பின் தமிழும் சரஸ்வதியும் வீட்டிற்குள் வர, கோதை வசுவிடம் சொல்லி சாமி ரூமில் விளக்கு ஏற்ற போக சொல்கிறார். அப்போது சந்திரகலாவின் திட்டம் அனைத்தும் வீணாகிப்போனதை நினைத்து கோவப்படுகிறார். சரஸ்வரி விளக்கேற்ற கோதை அதை பார்த்து சந்தோசப்படுகிறார். அடுத்து சீரியலில் என்ன மாதிரி திருப்பம் வர போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.