விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு நடந்தது என்ன? அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவியில் சிறந்த ஆங்கராக கலக்கி வரும் தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு கடந்த மாதம் பிறந்தநாள் வந்த நிலையில் தனக்கு உடம்பு சரியில்லை அதனால் வீடியோ வெளியிடவில்லை என வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தொகுப்பாளினி பிரியங்கா:
விஜய் டிவியில் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா. இதுவரை தொகுப்பாளராக மட்டுமே ரசிகர்களை கவர்ந்த அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய இயற்கையான குணத்தால் பல மக்களை கவர்ந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் வரை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த அவர் அதன் பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லை.
Exams Daily Mobile App Download
அவருடைய யூடுயூப் சேனலில் வீடியோக்கள் அதிகமாக வந்தது இல்லை. மேலும் அவருடைய 30வது பிறந்தநாள் ஏப்ரல் 28 ஆம் தேதி வந்தது. அதில் அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை சொன்னார்கள். ஆனால் அவர் அதற்கு கூட ரிப்ளே செய்யாமல் இருப்பதால் ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்தனர். பிரியங்காவிற்கு என்ன தான் ஆச்சு என பல தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கினார்.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் கேபி – ரசிகர்கள் ஷாக்!
மற்ற நிகழ்ச்சிக்களில் அவர்கள் வராமல் இருந்தார். இது குறித்து பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தாமதமாக வீடியோ போடுவதற்கு சாரி, என்னுடைய பிறந்தநாளுக்கு பலர் விஷ் செய்து இருந்தீர்கள் என்னால் அந்த நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்னுடைய 30வது பிறந்தநாள் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் சீக்கிரம் சமூக வலைத்தளங்களில் லைவ் வந்து பேசுகிறேன். எனக்கு இப்போது உடம்பு சரி இல்லை. அதெல்லாம் சரியானதும் வருகிறேன் என சொல்லி இருக்கிறார்.