நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 5ம் அலை பரவல்! அரசு எடுக்கப்போகும் முடிவு!

0
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 5ம் அலை பரவல்! அரசு எடுக்கப்போகும் முடிவு!
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 5ம் அலை பரவல்! அரசு எடுக்கப்போகும் முடிவு!
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 5ம் அலை பரவல்! அரசு எடுக்கப்போகும் முடிவு!

உலகில் பல்வேறு நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் சமயத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முழு ஊரடங்கு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டது. அத்துடன் இதற்கு எதிராக பல்வேறு வகையான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இந்த வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸை விட வீரியம் மிக்கதாக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த “எக்ஸ்இ”, வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

Exams Daily Mobile App Downloadb

இதில் குறிப்பாக சீனா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 2 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸின் 5ம் அலை தொடங்கியுள்ளதாக சுகாராத்துறை அமைச்சர் ஜோ பாஹாலா தெரிவித்து உள்ளார். அத்துடன் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்று உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரமடையும் கொரோனா, தலைநகரில் போக்குவரத்து சேவை நிறுத்தம் – அரசின் அதிரடி உத்தரவு!

அத்துடன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக சுகாராத் துறை அமைச்சர் ஜோ பாஹாலா தகவல் தெரிவித்துள்ளார். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் கொரோனா தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!