முடிவுக்கு வரும் TCS நிறுவனத்தின் WFH முறை – முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து அனைவருக்கும் வாழ்க்கை இயல்பு நிலையினை எட்டி உள்ளதால், WFH முறைக்கு அனுமதித்திருந்த பல நிறுவனங்கள் தனது ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வந்து வேலை பார்க்க அறிவுறுத்தி உள்ளது. அந்த வகையில், தற்போது IT துறையில் சிறந்த நிறுவனமாக கருதப்படும் TCS நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
TCS நிறுவனம்:
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் குறைந்து, பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)-ல் இருந்து வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கை நிறுத்தப்பட்டுள்ளது. TCS நிறுவனம் தனது ஊழியர்களை கடந்த இரு ஆண்டுகளாக வீட்டில் இருந்த படியே வேலை பார்க்க என்று அனுமதித்து இருந்தது. தற்போது தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த காரணத்தாலும், இயல்பு நிலை திருப்பி இருப்பதாலும் ஊழியர்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடம் குறித்த முக்கிய தகவல் – அறிவிப்பு வெளியீடு!
தற்போது வந்துள்ள தகவல்களின்படி, வரும் நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை முழுமையாக நீக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 25 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்த பிறகு 25*25 மூலக்கூறு பயன்படுத்தப்படும் என்று TCS தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25*25 மூலக்கூறு முறை மிகவும் முறையான வரம்பில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் வீட்டில் இருந்து வேலை செய்து பழக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தற்போது மீண்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலையை தொடர விரும்பவில்லை என்று பல ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. TCS நிறுவனம் ஊழியர்களின் நலன் கருதி WFH முறையினை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று அனைவரும் விருப்பப்படுகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்