தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடம் குறித்த முக்கிய தகவல் – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடம் குறித்த முக்கிய தகவல் - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடம் குறித்த முக்கிய தகவல் - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடம் குறித்த முக்கிய தகவல் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தற்காலிக முன்னுரிமை பட்டியல் வழங்குவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல புதிய கல்வி முறைகளை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைய தொடங்கியது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்குக்கு எளிய முறையில் பாடங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இந்தியாவில் மருந்துகளின் விலை மாற்றம் – முக்கிய தகவல் வெளியீடு!

மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு தற்காலிக பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர்களின் தற்காலிக முன்னுரிமை பட்டியல் வழங்குவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது 1.1.2022 நிலவரப்படி வட்டார கல்வி அலுவலராக, பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு 31.12.2012 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்த மற்றும் 31.12.2021 க்குள் வட்டார கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று முழுத்தகுதி உடைய அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரங்களை உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள் தொகுக்கப்பட்டு 31.12.2008க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணி புரியும் 356 நபர்களை கொண்ட தற்காலிக தகுதி வாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டியலில் திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் ஏதேனும் இருப்பின் உடனே தெரிவிக்குமாறும், இல்லை என்றால் அதற்கான சான்றுகளை சமர்பிக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!