அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை – பொருளாதார நெருக்கடியால் முடிவு!

0
அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை - பொருளாதார நெருக்கடியால் முடிவு!
அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை - பொருளாதார நெருக்கடியால் முடிவு!
அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை – பொருளாதார நெருக்கடியால் முடிவு!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு அனைத்து விதமான பணிகளும் முடங்கி உள்ளது. தற்போது மேலும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி:

உலகம் முழுவதும் கொரோனா கால ஊரடங்கு நடவடிக்கைகளால் கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. ஆனால் அதன்பிறகு கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் மெல்ல நெருக்கடி நிலையானது மாறி மீண்டும் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. இதனால் பொருளாதார நடவடிக்கைள் மேம்பட தொடங்கியது. ஆனால் முழுக்க முழுக்க சுற்றுலா துறையை மட்டுமே நம்பி முழுவதுமாக இயங்கி வந்த இலங்கை அரசானது மீண்டு வர வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அரசின் ஆட்சியில் உள்ள குறைபாடு தான் இதற்கு காரணம் என்றும் மக்கள் போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.

TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இதனால் ஆட்சி மாற்றம் கூட நடைபெற்றது. இந்நிலையில், நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இருப்பினும், நிலைமை மீண்டு வர தற்போதைக்கு வாய்ப்பில்லை. மிகவும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பள்ளிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அரசின் முக்கியமான அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் உள்ள சிர­மம் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்கொண்டு திங்­கள்­கி­ழ­மை­யில்­ருந்து குறைந்­த­பட்ச ஊழி­யர்­கள் மட்­டும் வேலைக்கு வர வேண்டும் என்று பொது நிர்­வா­கமும், உள்­துறை அமைச்சும் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுத்­துறை ஊழி­யர்­க­ளுக்கு வாரத்­திற்கு நான்கு நாள் என்ற வேலை முறை அறிமுகப்படுத்திய நிலையில், மற்ற நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். உணவு தட்டுப்பாடும் அதிகம் உள்ளதால், ஐநா­வின் உலக உணவு திட்­டத்­தின் மூலம் கொழும்­பில் உள்ள 2,000 கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு உணவு பற்­றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!