மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பிப்.15 வரை வீட்டில் இருந்தே வேலை நீட்டிப்பு!
இந்தியாவில் கொரோனா எழுச்சி காரணமாக , மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து 50 சதவீதத்தினர் வேலை பார்க்க அரசு அனுமதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு மீண்டும் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்-15 வரை நீட்டிப்பு:
இந்தியாவில் கோவிட்- 19 தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா இரண்டாம் அலையை அடுத்து மூன்றாவது அலையும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் இந்தியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வகையில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , கல்வி நிறுவனங்கள் மூடல் என இரண்டாம் அலையின் போது போட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமலில் உள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் , அரசு அலுவலகத்தில் 50 சதவீதத்தினருக்கே அனுமதி அளிக்கப்படும் என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கலாம். இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் அலுவலகத்தில் வருவதை தடுக்க காலை 9 மணி முதல் 5.30 மணி வரை மற்றும் காலை 10 முதல் 6.30 வரை மணி என அலுவலக பணி நேரம் இரண்டாக மாற்றபட்டது. இதனால் தொற்று பாதிப்பு அதிகரிப்பதை தடுக்கலாம்.
இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – பிப்.14 வரை அமல்! மாநில அரசு அறிவிப்பு!
இந்த அறிவிப்பு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் அலுவலகத்துக்கு வராத ஊழியர்கள் எப்போதும் தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவித்தது. இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு உயர்வு காரணமாக அரசு ஊழியர்கள் 50 சதவீதத்தினர் வீட்டில் இருந்தே பணி செய்வதற்காக அளித்த அனுமதி, பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.