இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – பிப்.14 வரை அமல்! மாநில அரசு அறிவிப்பு!
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கி விட்டது. இரண்டாம் அலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் அதிக பாதிப்புகளை ஏறப்படுத்தியவாறு தற்போது ஓமிக்ரான் வைரஸ் மீண்டும் பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மட்டும் வார இறுதி தினங்களில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. பொது இடங்களில் கட்டுப்பாடுகள் போன்றவை அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
UPSC 14 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலை காரணமாக வெகு நாட்களாக மூடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கை அமல்படுத்தி கொள்ள அனுமதி வழங்கியதை அடுத்து மாநில அரசு மக்களின் நலன் கருதி ஊரடங்கு நேரத்தை நீடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திரா மாநில அரசு அமலில் இருந்து இரவு நேர ஊரடங்கை நீடித்துள்ளது.
IPL ஏலம் 2022: ரூ.2 கோடி அடிப்படை விலை கொண்ட 17 இந்திய வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மாதம் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இரவு நேர ஊரடங்கானது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 14ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பொது மக்கள் அரசின் கொரோனா நோய்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.