வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம் – மாகாண அரசு முடிவு!
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து விதிக்கப்பட்டிருந்த வார இறுதி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை இப்போது நீக்குவதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் நீக்கபட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு நீக்கம்
கனடாவை சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தலைநகரான கிரேட்டர் விக்டோரியாவில் அமலில் இருந்த வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிரேட்டர் விக்டோரியா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து அந்த பகுதியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த வன்முறைக்கு தொடர்புடையவர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது அந்த மாகாணத்தில் கிட்டத்தட்ட 2 மாதங்களாக அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க கொலம்பியா மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தோரும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டது. அதாவது வன்முறைக்கு காரணமாக கைது செய்யப்பட்டவர்களில் எவரும் சர்வதேச மாணவர் இல்லை என கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விக்டோரியா ஹோம்ஸ்டே திட்டத்தில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
ஆனால் அது மாணவர்களின் வயதைப் பொறுத்து கட்டுப்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மாணவர்களின் பாதுகாப்பையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் சமூக நடவடிக்கைகள், டவுன் டவுன் மையத்திற்கு மாணவர்கள் வருவது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாக டவுன் டவுன் பகுதிகளில் போலீசார் வார இறுதி நாட்களில் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.