இனி கோடை மழை அடிச்சு ஊத்த போகுது…தமிழகத்தில் அடுத்த 4 நாளுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை தகவல்!

0
இனி கோடை மழை அடிச்சு ஊத்த போகுது...தமிழகத்தில் அடுத்த 4 நாளுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்!
இனி கோடை மழை அடிச்சு ஊத்த போகுது...தமிழகத்தில் அடுத்த 4 நாளுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்!
இனி கோடை மழை அடிச்சு ஊத்த போகுது…தமிழகத்தில் அடுத்த 4 நாளுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கும் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. இதையடுத்து, தற்போது வானிலை மையம் அடுத்த 4 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் மார்ச் 28 ஆம் தேதி மாபெரும் போராட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்த அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதனால் இன்று முதல் வருகிற 21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதை தொடர்ந்து, வருகிற 22, 23,24ம் தேதிகளில் கடலோர தமிழக மாவட்டங்கள் அத்துடன் இதனை ஒட்டி இருக்கும் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்த அறிவிப்புகள் ஏதும் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!