தமிழகத்தில் வரும் மார்ச் 28 ஆம் தேதி மாபெரும் போராட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர்.
போராட்டம்:
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாகவே பழைய ஓய்வூதியம் தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், பழைய ஓய்வூதியத்தை நடைமுறைக்கு கொண்டு வர அரசு தற்போது வரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தவுள்ளனர். இதனை தொடர்ந்து மேலும் சில கோரிக்கைகளை வைக்கவுள்ளனர்.
காவல்துறையில் 13,525 காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல்!
அதாவது, வரும் மார்ச் 28 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஒருநாள் போரட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் தமிழகத்தை சார்ந்த அனைத்து அரசு நியாய விலைக்கடை பணியாளர்களும் கலந்து கொள்வார்கள் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும், இந்த போராட்டத்தில் பழைய ஓய்வூதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கவுள்ளனர்.