ஐய்யா….தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரே மழை தான் – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!

0
ஐய்யா....தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரே மழை தான் - வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!
ஐய்யா....தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரே மழை தான் - வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!
ஐய்யா….தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரே மழை தான் – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!

வட உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில தினங்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதன் காரணமாக பெரும்பான்மையான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் 19ம் தேதி வரையிலான வானிலை நிலவரம் குறித்த அறிவிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதில், வட உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, வருகிற 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படுவதுடன், குறைந்தபட்சமாக 23-24 டிகிரி முதல் அதிகபட்சமாக 33-34 டிகிரி செல்சியஸ்‌ வரை வெப்பநிலை இருக்கக்கூடும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!