இனி ஒரே ஜாலிதான் .. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

0
இனி ஒரே ஜாலிதான் .. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
இனி ஒரே ஜாலிதான் .. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
இனி ஒரே ஜாலிதான் .. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் கோடைகாலத்தை நெருங்கிவிட்டதால், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகிவிட்டது. இந்த நிலையில், இன்று முதல் 14ம் தேதி வரையிலான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பெரும்பான்மையான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு – மத்திய அரசு புதிய அறிவிப்பு!

இதனை தொடர்ந்து, வருகிற 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து, இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!