ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு – மத்திய அரசு புதிய அறிவிப்பு!

0
ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு - மத்திய அரசு புதிய அறிவிப்பு!
ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு - மத்திய அரசு புதிய அறிவிப்பு!
ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு – மத்திய அரசு புதிய அறிவிப்பு!

இந்திய ராணுவத்தின் முப்படையில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் “அக்னிபாத்” திட்டத்தில் ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படை வேலை வாய்ப்பில் 10% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு

மத்திய அரசு முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி 17 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகால ராணுவ பணியில் சேரலாம். அவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து நீக்கப்படுவார் எனவும், அவர்களுக்கு பென்சன் எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – அரசின் புதிய திட்டம்… விரைவில் அமல்!

இந்நிலையில் முதலில் இந்த திட்டத்திற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பின் லட்சக்கணக்கில் இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து இருக்கின்றனர். அந்த வகையில் ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு அக்னிவீரர்களாக அதிகம் பேரை உருவாக்க மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!