பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறை சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. வங்கி கணக்கு போன்று அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்குகள் தொடங்கவும், கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ATM கார்டு போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் துவக்கம்!
செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இக்கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்சமாக ரூ.250 செலுத்த வேண்டும்.
இந்தியாவில் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி – Sputnik Light பரிசோதனைக்கு ஒப்புதல்!
மேலும் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250 அதிகபட்சமாக ரூ.,1,50,000 வரை வைப்புத் தொகை செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி பெறலாம். திட்டத்தின் மதிப்பு தொகையில் 50% வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.