தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் துவக்கம்!

0
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய திட்டம் துவக்கம்!
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய திட்டம் துவக்கம்!
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் துவக்கம்!

தமிழகத்தில் நீட் தேர்வு மூலமாக மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். அதனை தடுக்க நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 1.12 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வு காரணமாக ஒரு சில மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழக அரசும் பல ஆண்டுகளாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோரிக்கை வைத்து வருகிறது.

இந்தியாவில் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி – Sputnik Light பரிசோதனைக்கு ஒப்புதல்!

இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் படி நீட் தேர்வு எழுதிய 1.12 லட்ச மாணவர்களின் தொலைபேசி எண்களை தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெற்று மாணவர்களின் ஒப்புதலுடன் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தேர்வு எழுதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முதலில் ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் செப்.16ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் மாணவ, மாணவிகள் 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறலாம். மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் ஆலோசனை வழங்கப்படும். இதற்காக 333 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் ஆலோசனை தயார் நிலையில் உள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!