இந்தியாவில் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி – Sputnik Light பரிசோதனைக்கு ஒப்புதல்!
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி பயன்பாடுகளில் டாக்டர் ரெட்டி ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை 3 வது கட்ட பிரிட்ஜிங் சோதனைகளுக்கு ஈடுபடுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
தடுப்பூசி சோதனை
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான செயல்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இவ்வகை தடுப்பூசிகள் 2 டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2 டோஸ்களையும் சேர்த்து செலுத்தும் போது ஒரு நபருக்கு 90%க்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (RDIF) இணைந்து ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியை கண்டறிந்துள்ளது.
தமிழகத்தில் செப்.16ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இவ்வகை தடுப்பூசிகளை ஒரு முறை செலுத்திக்கொண்டால் அதிகளவு எதிர்ப்பு சக்தி உருவாவதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. அந்த வகையில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மீதான 3 வது கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ள பிற்பாடு, இந்நிறுவனம் தடுப்பூசியின் பாதுகாப்பு, நோயெதிர்ப்பு திறன் மற்றும் செயல்திறன் தரவை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (DCGI) சமர்ப்பித்தது. இந்த நிலையில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி சோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
செப்.30 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – மாநில அரசு உத்தரவு!
இது தொடர்பான ஸ்புட்னிக் லைட் தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இவ்வகை தடுப்பூசி 79.4 சதவிகித செயல்திறனை கொண்டுள்ளது எனவும், இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டால், நாட்டில் பயன்படுத்தப்படும் முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி ரஷ்யாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவ்வகை தடுப்பூசி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.