தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – தொடங்கியது அக்னி நட்சத்திரம்!

0
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - தொடங்கியது அக்னி நட்சத்திரம்!
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - தொடங்கியது அக்னி நட்சத்திரம்!
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – தொடங்கியது அக்னி நட்சத்திரம்!

தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது. நேற்று வரை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பொது மக்களும் கோடை மழை வருமா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் மழை பெய்து முடிந்துள்ள நிலையில் இப்போது கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது. இந்த அக்னி நட்சத்திரமானது தமிழில் உள்ள நட்சத்திரங்களில் இருக்கும் பரணி மற்றும் கார்த்திகை ஆகிய நட்சத்திரங்கள் சூரியனுடன் சேர கூடிய நாட்கள் தான் அக்னி நட்சத்திரமாக வருகிறது. மேலும் இந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இந்த வெயிலுக்கு மத்தியில் தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதனால் ஜக்கம்பட்டி பகுதியில் மாடியில் இருந்த தகர கூரையை சரி செய்ய சென்ற கட்டிட தொழிலாளி ஜெயவேல், பலத்த காற்றில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணாபுரம் அருகே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அதனை தொடர்ந்து, கோவையில் உள்ள ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர், வடவள்ளி, காந்தி பார்க் ஆகிய பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இது மட்டுமல்லாமல் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளான அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வருகின்ற 7 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!