SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – KYC குறித்த முக்கிய எச்சரிக்கை!
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி தொடர்பான பல்வேறு விதிகளின் கீழ் இதுவரை KYC செயல்முறையை முடிக்காத கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
கணக்கு முடக்கம்
நாட்டின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயல்முறைகளை முடிக்கவில்லை என்றால் அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏற்கனவே ஒரு சில வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை SBI முடக்கம் செய்துள்ளது. இதற்கு காரணம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் KYC செயல்முறையை முடிக்காதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்!
இது போன்ற சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் எந்த வகையான பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்போது கணக்குகள் முடக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இது குறித்து SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வங்கி தொடர்பான பல்வேறு விதிகள் மாற்றப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களின் நினைவில் இருக்க வேண்டும். அதற்கு முன்பாக, KYC செயல்முறையை முடிக்காத கணக்குகளை முடக்குவது குறித்து வங்கி எச்சரிக்கை செய்தியை அனுப்பியது.
Exams Daily Mobile App Download
இருப்பினும் இந்த செயல்முறையை முடிக்காதவர்களின் கணக்குகளை நிர்வாகம் தற்போது முடக்கி இருப்பதாகவும், இந்த செயல்முறையை முடித்த பிறகு வங்கி சேவைகளை தொடர்ந்து அணுக முடியும் என்றும் SBI தனது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி இருக்கிறது. இதற்காக SBI வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் KYC நடைமுறையை முடிக்க, வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், PAN அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வங்கி கிளைக்கு சென்று KYC படிவத்தை நிரப்பி சமர்ப்பித்தால் போதுமானது.