TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? தேர்வுக்கு தயாராவது எப்படி? சில டிப்ஸ்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? தேர்வுக்கு தயாராவது எப்படி? சில டிப்ஸ்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? தேர்வுக்கு தயாராவது எப்படி? சில டிப்ஸ்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? தேர்வுக்கு தயாராவது எப்படி? சில டிப்ஸ்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்கு எந்த பகுதியை முதலில் படித்தால் தேர்ச்சி பெற முடியும் என்று பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக எந்த வித போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி TNPSCயின் குரூப் 2, 2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி தேர்வு நடைபெற இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதால் தமிழகத்தில் இத்தேர்வுக்கு சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இத்தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்கள் கொண்டதாக கேட்கப்படும். அத்துடன் ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது.

1 முதல் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 22ம் தேதி வரை கோடை விடுமுறை!

குரூப் 4 தேர்வுக்கு முதலில் எதை படிப்பது?

1. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்மொழித்தகுதி தேர்வு என்பதால் கட்டாயமாக 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
அத்துடன் தமிழில் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படுவதால் முதலில் தமிழை நன்றாக படிக்க வேண்டும்.

2. முதலில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். அதன்பின்னர் நேரம் இருந்தால் 11,12ம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும்.

3. இதில், செய்யுள், உரைநடை, இலக்கணம் என அனைத்து பிரிவுகளையும் தொடர்ச்சியாக படித்துக்கொள்ளுங்கள். மேலும் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

4. அடுத்ததாக கணித பாடத்தில் 25 கேள்விகள் கேட்கப்படும். இந்த 25 கேள்விகளுக்கும் சரியாக விடையளித்தால் தான் கட் ஆப் மதிப்பெண் அதிகமாகும். இதற்கு கணித பாடத்திட்டத்தில் தலைப்பின் கீழ் உள்ளவற்றை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து உங்களை தயார்ப்படுத்த வேண்டும்.

5. இதையடுத்து பொது அறிவு பகுதியை படிக்கும்போது அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். மேலும் பள்ளி புத்தகத்தில் பெட்டிச் செய்தி, அடைப்புக்குறிக்குள் உள்ள தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவைகளை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.

6. புவியியல் பாடப்பிரிவை படிக்கும் போது இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் உள்ளிட்டவை அருகில் வைத்து கொண்டு இடங்களை பார்த்து படித்தால் தேர்வு எழுதும்போது நினைவுக்கு வரும். இது உங்களை அதிக கட் ஆப் மதிப்பெண்களை எடுக்க வைக்க பேருதவியாக இருக்கும்.

7. இறுதியாக நடப்பு நிகழ்வுகளுக்கு நாள்தோறும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும். மேலும் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு செய்திகளை கண்டறிந்து படிக்க வேண்டும்.

8. குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம் பள்ளி பாடப் புத்தகங்களில் பெரும்பாலும் உள்ளது. அதனால் பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!