1 முதல் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 22ம் தேதி வரை கோடை விடுமுறை!
புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
கோடை விடுமுறை:
தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஜூன் 22ல் முடிவடையும் என்றும், 1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் புதிய வகுப்புகள் தொடங்கும் என்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் 23, 2022 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக 1ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 23 முதல் பள்ளிகள் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 11ம் வகுப்புக்கான பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Degree முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பியுங்கள்..!
மேலும், 11 ஆம் வகுப்பு புதிய மாணவர்களுக்கான விண்ணப்ப செயல்முறைகள் ஜூன் 17 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் தமிழ்நாடு தேர்வு வாரியத்தால் ஏப்ரல் முதல் மே மாதங்களில் நடத்தப்பட்டன. இந்த மாணவர்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஜூன் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது.