விஜய் டிவி குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் அழுத விஜே மணிமேகலை – காரணம் இதுவா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சென்ற வார எபிசோடில் சில சோக சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதனால் மணிமேகலை அழுது கொண்டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி:
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் புதுவிதமான கன்டென்ட் உடன் மக்களை மகிழ்விக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. பழைய கோமாளிகள் களமிறங்கிய இந்த நிகழ்ச்சியில் காமெடிக்கு குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
அனுவை தேடி கண்டுபிடித்த சத்யா, ருக்மணி தான் காரணம்? “மௌன ராகம் 2” ப்ரோமோ ரிலீஸ்!
வாரந்தோறும் கோமாளிகள் பல கெட்டப்பில் வர, நகைச்சுவைக்கு குறைவில்லாமல் இருந்தது. மேலும் இந்த முறை பல வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வார டாஸ்கில் மணிமேகலையும், வித்யூலேகாவும் ஜோடியாக இருந்தனர். இந்த ஜோடி தான் சென்ற வாரமும் இருந்து அட்வான்டேஜ் டாஸ்க் வென்றனர். இந்நிலையில் இந்த வாரமும் அவர்கள் அட்வான்டேஜ் டாஸ்க் வரை வந்துவிட்டனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் டாஸ்க்கில் சுடு தண்ணீரில் உருளைக் கிழங்குகள் போடப்பட்டிருந்தது. அதை கோமாளிகள் மட்டுமே உரிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் மணிமேகலைக்கு சூடு தாங்க முடியாது என்பதால் அவரால் முடியாது என சொல்லி விட்டார். அதனால் வித்யூலேகா கோவப்பட அதனால் மணிமேகலைக்கு கோவம் வந்து அழத் தொடங்கி விட்டார். பின் எல்லாரும் சமாதானம் செய்ய ஆனாலும் மணிமேகலை அந்த உருளைக்கிழங்குகளை உரித்தார். அவ்வாறு காமெடி நிகழ்ச்சியில் இப்படி ஒரு சோக காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.