சின்னத்திரை தொகுப்பாளர் “ஆனந்த கண்ணன்” திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!
சின்னத்திரை தொகுப்பாளராக மக்களிடம் பிரபலமடைந்த வி.ஜே ஆனந்த கண்ணன் நேற்று நள்ளிரவில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு முன்னணி நடிகை நடிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மரணம்:
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் 90’ஸ் கிட்ஸ் விருப்பமான விஜேவாக வளம் வந்தவர் அனந்த கண்ணன். அப்போதைய காலகட்டத்தில் சன் மியூசிக்கில் அவர் நிகழ்ச்சிகளை பார்க்க பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அதன் பின்னர் அவர் சிந்துபாத் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த செய்தி கேட்ட திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட நிலைமையை நினைத்து சமூக வலைத்தளங்களில் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக சிறந்த தொகுப்பாளராக வலம் வந்த அவர் அதன் பின்னர் 7 ஆண்டுகளாக எந்த டிவி நிகழ்ச்சிகளிலும் காணமுடியவில்லை.
அதன் பின்னர் தற்புது டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கும் சுவை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்க ஒப்பந்தம் செய்திருந்தார். சமீபத்தில் அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ கூட வெளியானது. இந்நிலையில் அவரின் தற்போதைய நிலை காரணமாக அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.