வீட்டு வாசலில் வந்து நிற்கும் கண்ணன், கோவத்தில் திட்டும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
வீட்டு வாசலில் வந்து நிற்கும் கண்ணன், கோவத்தில் திட்டும் மூர்த்தி - இன்றைய
வீட்டு வாசலில் வந்து நிற்கும் கண்ணன், கோவத்தில் திட்டும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
வீட்டு வாசலில் வந்து நிற்கும் கண்ணன், கோவத்தில் திட்டும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா சாப்பிடாமல் இருப்பதை பார்த்து மூர்த்தி கவலைப்படுகிறார். கண்ணன் வீட்டு வாசலில் நிற்க மீனா வீட்டிற்கு தெரியாமல் அவனிடம் பேசுகிறார். அதை தெரிந்து மூர்த்தி கோபப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கல்யாணம் செய்ததை நினைத்து லட்சுமி அம்மா சரியாக சாப்பிடாமல் இருக்கிறார். எல்லாரும் எவ்வளவோ சொல்ல அவர் சமாதானம் ஆகாமல் இருக்கிறார். கதிர் மருத்துவமனைக்கு போவோமா என்று கேட்க அதற்கும் வேண்டாம் என்று சொல்கிறார். அவனுக்காக எங்க எல்லாரையும் சோகத்தில் விடாதீங்க என்று மூர்த்தி பேசுகிறார். பின்னர் கதிர் ஜீவா மூர்த்தி கடைக்கு செல்ல, அங்கே கண்ணன் வருகிறார்.

தனம் உள்ளே இருந்து வந்து என்ன வெளியே நிற்கிறீர்கள் என்று கேட்க அங்கே கண்ணனை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மூர்த்தி உள்ளே சென்று கதவை மூட்டுகிறார். அப்போது மீனா பின்னால் சென்று கண்ணனை பார்த்து பேசுகிறார். அன்னைக்கு என்னிடம் சொல்ல வந்த ஆனா முழுசா சொல்லலையே அப்படி சொன்ன நான் இந்த வயசுல அதெல்லாம் வேண்டாம் என அப்பவே சொல்லிருப்பேன் என்று சொல்கிறார்.

லட்சுமியை கூட்டிக் கொண்டு செல்ல வரும் கண்ணம்மா, அனுப்ப மறுக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

உன்னால இந்த வீட்டில் இருக்கும் யாரும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று மீனா திட்டுகிறார். பின்னர் மீனா உள்ளே செல்ல எங்க போன இவ்வளோ நேரம் என்று மூர்த்தி கேட்கிறார். பின்னாடி தான் இருந்தேன் என்று சொல்லி சமாளிக்க மூர்த்தி சத்தம் போடுகிறார். கண்ணனை பார்த்தல் பாவமாக இருக்கு அதான் போய் பேசுனேன் என்று சொல்ல, மூர்த்தி பயங்கர கோவத்தில் கத்துகிறார். வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்ய முடியும் இப்போ வாழ வழியில்லாமல் வந்து வீட்டு வாசலில் நிற்பான் என்று கத்துகிறார்.

அதை கேட்டு கண்ணன் அழுது கொண்டே கிளம்புகிறார். தனத்தின் அம்மா அவரை நன்றாக கவனிக்க மூர்த்தி பேசியதை நினைத்து கவலைப்படாதே என்று மீனாவை அழைத்து தனம் சொல்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை அக்கா, அவன் பண்ணது தப்பு தான் அதற்கு வெளியே அனுப்பினதும் சரி தான், ஆனால் அவன் வாழ எந்த உதவியும் செய்யாமல் அனுப்புவது தான் தவறு என்று சொல்கிறார்.

பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைப்பு?- மத்திய நிதி அமைச்சர் விளக்கம்!

பின்னர் தனம் நீ சொல்வது சரி தான் கண்ணன் இங்கே இருக்கணும்னு நாம நினைத்தால், மாமா வெளியே போயிருவேன் என்று சொல்கிறார். என்னால அதுனால ஒன்னும் பண்ண முடியாது மீனா என்று சொல்கிறார். தனம் அவரது அண்ணனுக்கு போன் செய்து எப்படி இருக்கீங்க அண்ணி எப்படி இருக்காங்க என்று கேட்கிறார். எல்லாரும் பாவம் தான் கண்ணன் பண்ணது அவ்வளவு பெரிய தப்பு என்று ஜெகா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!