ஆலியா மானசா 2வது குழந்தை பிறப்புக்கு பிறகு செய்த காரியம் – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி சீரியல் மூலமாக அறிமுகமாகிய ஜோடிகள் தற்போது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்த பிறகு ஆலியா செய்த காரியம் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
ஆலியாவின் மகன் அர்ஷ்:
சஞ்சீவ், ஆலியா ஜோடிகள் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடர் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். இருவரும் ராஜா ராணி சீரியலில் காதல் காட்சிகள் மூலமாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்கள். சீரியலில் ஆலியாவுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி ஆக்கி கொண்டார். காதலுக்கு ஆல்யாவின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழவே, வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவை கரம் பிடித்தார்.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இவர்களுக்கு கடந்த 2020 ல் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். அதை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2ல் நடித்து வந்த ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமானதை அடுத்து குழந்தை பிறக்க குறுகிய காலம் இருக்கும் வரையிலும் தொடரில் வயிற்றில் குழந்தையுடன் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறக்க ‘அர்ஷ்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.
குழந்தையின் புகைப்படத்தை அண்மையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்கள். எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் ஆலியா தற்போது குழந்தை பிறப்புக்கு பிறகு ஒரு போஸ்ட் கூட பதிவு செய்யவில்லை சஞ்சீவ் அவர்கள் தான் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆல்யா மானசா சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் பேசும் விதமாக ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் கேள்வி வினா மூலமாக பதில் அளித்துள்ளார் இதனால் ரசிகர்களும் படு குஷியில் உள்ளார்கள்.