தமிழகத்தில் ஏப்.8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!

0
தமிழகத்தில் ஏப்.8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!
தமிழகத்தில் ஏப்.8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!
தமிழகத்தில் ஏப்.8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!

தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற 6ம் தேதி அன்று செங்கல்பட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டில் வருகிற 6ம் தேதி அன்று தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அத்துடன் தங்கள் நிறுவனத்திடம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணியில் அமர்த்த உள்ளனர். இம்முகாம் செங்கல்பட்டில் வேண்பாக்கம் ஐ.டி.ஐ வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் வருகிற 8ம் தேதி அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவரக்குறிப்பு உள்ளிட்டவற்றுடன் வருகை புரிய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அதனால் வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!