தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் – வழிமுறைகள் வெளியீடு!

0
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் - வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் - வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் – வழிமுறைகள் வெளியீடு!

இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி தின முன்னேற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி:

இந்தியா முழுவதும் தற்போது அனைத்து கோவில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து கோவில்களிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிகளும், திருவிழாக்களும் நடைபெற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளதால் அனைத்து கோவில்களும் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்தி கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த விழா விமர்சையாக கொண்டப்படும். இதே போல் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் ஆக.31 ல் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியுடன், சிறப்புடன் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தயார் படுத்தியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மாசு இன்றி சிலைகள் செய்து, உரிய முன் அனுமதியுடன் விழாவை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதுடன், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான சிறப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முக்கிய தகவல் இதோ!

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் விழா அமைதியுடன் நடைபெறவும், மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியுடனும், சிறப்புடனும் நடைபெற பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை அமைப்பினர், பொதுமக்களுடன் ஆலோசனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் களிமண் அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருளில் சிலைகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலைகளை கரைக்க அனுமதி அளித்துள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் இருந்தால் ஆக.31க்கும் முன்பே உரிய உள்ளாட்சி அமைப்புகள் மூலம் போதுமான தண்ணீர் நிரப்பி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பான முறையில் விழாவை கொண்டாட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!