விஜய் டிவி சீரியல் நடிகர் தற்கொலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சின்னத்திரையில் பிரபலமான சீரியலான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராகவேந்திரன். இவரை பற்றிய செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்த செய்தியினை இப்பதிவில் காண்போம்.
சின்னத்திரை நடிகர்:
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் சீரியல் மூலம் பிரபலமானவர் ராகவேந்திரன் புலி. தற்போது சின்னத்திரையை விட்டு ஒதுங்கி விட்டார். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலாவிற்கு நண்பராக நடித்து கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த தொடரில் இருந்தும் விலகினார். இந்த சீரியலில் வெண்ணிலாவின் நண்பன் மாறன் ரோலில் நடித்து கொண்டிருந்தார்.
Exams Daily Mobile App Download
அதன் பிறகு சம்பளம் குறைவு, வாய்ப்பில்லை என்று சீரியலில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர், சினிமா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் தண்ணி கேன் போடும் வேலை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் பல ஏமாற்றங்களை சந்தித்ததால் டிப்ரஷனில் இருப்பதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ராகவேந்திரன் புலி கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஒரே ஒரு ஒன் சைடு லவ் ” மொத்த பாடியும் கிளோஸ். மன அழுத்தத்தால் மொத்த பாடியும் டேமேஜ், நல்லா இருமா என்ன கொடுமைடா என்று கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி வீடியோ ஓன்று வெளியிட்டிருந்தார்.
கோபிக்கு ஆதரவாக பேசும் ராதிகாவின் அண்ணன், பதிலடி கொடுத்த பாக்கியா – சீரியலில் அடுத்து வருபவை!
மேலும் அந்த போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் பல பாசிட்டிவ் கமெண்டுகள் கிடைத்தன. இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்து ஹாஸ்பிடலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அவர் ஜாலியாக நண்பர்களுடன் வெளியிட்ட இந்த போஸ்ட் சீரியஸாக மாற்றப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகாவேந்திரன் புலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னொரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் 2 நாட்களுக்கு முன் நான் வெளியிட்ட ஒரு தலை காதல் பிரேக் அப் போன்ற வீடியோ ஜாலியாக எடுக்கப்பட்டது. அதற்காக நான் தற்கொலை முயற்சி செய்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி உள்ளேன் என்று தவறான வதந்திகளை பரப்புவது மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தன் குடும்பத்தில் இருப்பவர்கள் இதனால் மிகவும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.