விஜய் டிவியில் “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து ஆலியா மானசா விலக காரணம் – சஞ்சீவ் சொன்ன விளக்கம்!
விஜய் டிவியில் “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து ஆலியா மானசா விலகியதற்கான காரணம் பற்றி விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். முதலில் மாற்ற வேண்டிய திட்டம் இல்லை ஆனால் ஆலியாவின் உடல் நிலை காரணமாக தான் விலகியதாக சொல்லி இருக்கிறார்.
ராஜா ராணி 2:
தமிழ் சின்னத்திரை சீரியல்களை பல குடும்பங்கள் விரும்பி பார்க்கின்றனர். அதனால் சீரியல் மட்டுமல்லாமல் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட ரசிகர்களுக்கு விருப்பமாக இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியல் ஆகும். இந்த சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடித்து வருகிறார். சந்தியாவாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். ஐஏஎஸ் கனவுடன் இருக்கும் பெண் ஒருவர் திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியே கதை இருக்கிறது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண்? அடுத்த கட்டத்திற்கு நகரும் கதை!
இந்நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அவர் பிரசவத்திற்கு பின் சீரியலில் நடிப்பாரா என ரசிகர்கள் கேட்டதற்கு தொடர்ந்து சீரியலில் நடிப்பேன் என சொல்லி இருந்தார். ஆனால் திடீரென அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது ரியா விஸ்வநாதன் என்பவர் நடித்து வருகிறார். ஆலியா சீரியலில் இருந்து விலகமாட்டேன் என சொல்லிவிட்டு திடீரென விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்கான காரணமும் சரியாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஆலியாவின் கணவர் அதற்கான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதில் ஆலியா பட பிடிப்பில் நடித்துவிட்டு மிகவும் கால் வலிக்கிறது என போன் செய்து அழுவார். மேலும் இடுப்பு வலி அதிகமாக இருந்தது. அதனால் தான் அவர் சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்தார். அவர் சொன்னதும் பல ரசிகர்கள் வருத்தப்பட்டனர். மேலும் ஆலியா பிரசவத்திற்கு பின் என்ட்ரி கொடுக்க வேண்டும் என பதில் அளித்து இருக்கின்றனர்.