செயற்கை முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
முல்லைக்கு இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள சக்தி இல்லை என மருத்துவர் கூறியதை தொடர்ந்து, செயற்கை முறையில் முல்லை கருத்தரித்துள்ளார். அதுவும் இரட்டை குழந்தைகளை முல்லை பெற்றடுத்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாண்டிய ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புதுவிதமான பிரச்சனை உருவாகி கொண்டே இருக்கிறது. தற்போது முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை கதிரிடம் மருத்துவர் கூறுகிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிமுகமாகும் புது என்ட்ரி – யார் அவர்? ரசிகர்கள் ஷாக்!
குழந்தை பிறக்காது என்கிற விஷயம் முல்லைக்கு தெரிந்துவிட்டால் முல்லையால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் முல்லைக்கு தெரியாமல் மறைத்து விடுகிறார். ஒவ்வொரு மாதமும் குழந்தை உருவாகும் என முல்லை காத்து கொண்டிருக்கிறார். ஆனால் முல்லைக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால் உண்மையாகவே தனக்கு குழந்தை பிறக்குமா என்கிற சந்தேகம் முல்லைக்கு வருகிறது. இதனால் கதிர் ஒளித்து வைத்திருந்த மருத்துவர் கொடுத்த ரிபோர்ட்டை முல்லை பார்த்து அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்கிறார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ தொடரில் இருந்து நிரந்தரமாக விலகிய ஆல்யா மனசா – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஒரு குழந்தையை கூட என்னால் பெற்று கொடுக்க முடியவில்லை என மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார். இதற்கு மேல் இந்த வீட்டில் இருந்து எந்த வித பயனும் இல்லை என நினைத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். முல்லையை சமாளித்து கதிர் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதற்கு பின்பு குழந்தை பிறக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள போகிறார்கள். செயற்கை முறையில் குழந்தை பிறந்தால் பெரும்பாலும் இரட்டை குழந்தையாகவே இருக்கும். இதனால் முல்லைக்கும் இரட்டை குழந்தை பிறக்க போகிறது. பல ஆண்டுகள் காத்திருந்ததற்கு வர பிரசாதமாக முல்லை இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கவுள்ளார். கதிரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்.