விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ தொடரில் இருந்து நிரந்தரமாக விலகிய ஆல்யா மனசா – ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரசவத்திற்காக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய ஆலியா பிரசவம் முடிந்து மீண்டும் சீரியலில் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜா ராணி தொடரில் இருந்து ஆலியா நிரந்திரமாக விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராஜா ராணி 2:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஆலியா மானசா தான் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே லட்சியமாக கொண்டு வளர்ந்தவர் தான் சந்தியா. சந்தியாவின் பெற்றோரும் சந்தியாவின் ஐபிஎஸ் கனவிற்கு உறுதுணையாக இருந்தனர். ஆனால் தாய் தந்தை இருவரையும் ஒரு விபத்து ஒன்றில் சந்தியா இழந்து தவித்தார்.
விஜய் டிவி ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடியின் 2வது குழந்தையின் முதல் புகைப்படம் – வியக்கும் ரசிகர்கள்!
இதற்கு பிறகு தான் ஸ்வீட் கடை வைத்திருக்கும் சரவணனை திருமணம் செய்துகொண்டு ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற முடியாமல் தவித்தார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து சீரியலில் நடித்துவந்தார். மேலும், சந்தியா கதாபாத்திரத்தில் நான் மட்டுமே நடிப்பேன் எனவும் கூறியிருந்தார்.
‘கொடி’ தனுஷ் & திரிஷாவாக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம், கண்ணன் – வைரலாகும் வீடியோ!
அதன்பின்பு, பிரசவத்திற்கு சில தினங்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ரியா என்கிற புதுமுக நடிகை அறிமுகமானார். தற்போது ஆலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில தினங்களில் மீண்டும் ஆலியா ராஜா ராணி தொடரில் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எப்போது ராஜா ராஜா சீரியலில் மீண்டும் இணையப்போகிறீர்கள் என ஆலியாவிடம் கேட்ட போது இனிமேல் ரியா தான் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறியுள்ளார். ஆலியாவின் இந்த பதிலால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.