ரூம் கேட்டு சண்டை போடும் மீனா, ஐஸ்வர்யா.. மீனாவை நினைத்து வருத்தப்படும் கலை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
ரூம் கேட்டு சண்டை போடும் மீனா, ஐஸ்வர்யா.. மீனாவை நினைத்து வருத்தப்படும் கலை - இன்றைய
ரூம் கேட்டு சண்டை போடும் மீனா, ஐஸ்வர்யா.. மீனாவை நினைத்து வருத்தப்படும் கலை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
ரூம் கேட்டு சண்டை போடும் மீனா, ஐஸ்வர்யா.. மீனாவை நினைத்து வருத்தப்படும் கலை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவும், ஐஸ்வர்யாவும் ரூமில் தூங்க சண்டை போடுகின்றனர். ஆனால் பார்வதி வந்து ரூமில் படுத்துக் கொண்டு இருவரையும் வெளியே அனுப்புகிறார். மறுபக்கம் மீனாவை வெளியே அனுப்பியதால் ஜனார்தனனிடம் கேள்வி கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா மீனா வீட்டை சுற்றி பார்த்துவிட்டு வருகிறார்கள். அப்போது கதிர் வீடு சுமாராக தான் இருக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து இருங்கள் என சொல்கிறார். நீங்க எங்கே தூங்குவீங்க என ஐஸ்வர்யா கேட்க, நாங்க ஹாலில் தான் தூங்குவோம் என முல்லை சொல்கிறார். அப்போ நாங்க எங்கே தூங்குவது என ஐஸ்வர்யா கேட்க, முல்லை உங்களுக்கு எங்கே தூங்க வேண்டுமோ அங்கே தூங்குங்க என சொல்கிறார் முல்லை. உடனே ஐஸ்வர்யா அப்போ நான் பேக்கை கொண்டு சென்று உள்ளே வைக்கிறேன் என சொல்ல, மீனா பதட்டம் அடைகிறார்.

Follow our Instagram for more Latest Updates

ஐஸ்வர்யா உள்ளே பேக்கை கொண்டு சென்று வைக்க மீனா என்ன உன் திட்டம் என கேட்கிறார். எனக்கு என்ன திட்டம் என ஐஸ்வர்யா கேட்க, நீ ரூமில் தூங்கினால் நாங்க எங்கே தூங்குவது. எனக்கு குழந்தை இருப்பதாக மீனா சொல்கிறார். தனம் அக்காவிற்கும் குழந்தை இருக்கிறது, அவங்க ரூம் கேட்கவில்லை என சொல்ல, உடனே மீனா நான் கயல் பாண்டியன் இருவரையும் தூங்க வைத்துக் கொண்டு இங்கே தூங்குவேன் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா எங்களுக்கு தான் புதுசா கல்யாணம் ஆகி இருப்பதாக சொல்ல இருவரும் ரூம் எனக்கு தான் என சண்டை போடுகின்றனர். பின் பார்வதி வந்து நான் தூங்க போகிறேன் என சொல்லி, ரூமில் படுத்துக் கொள்கிறார்.

இருவரும் ரூமில் படுக்க வர ஆனால் அவங்க அவர்களை வெளியே தள்ளி படுத்துக் கொள்கின்றனர். மறுபக்கம் கலை மீனாவை இந்த நேரத்தில் வெளியே போக சொன்னது சரி இல்லை என சொல்கிறார். உடனே ஜனார்த்தனன் அங்கே நடந்ததை நீ பார்த்தாய் தான என சொல்கிறார். அவள் எப்படி வருவாள் புருஷன் தான முக்கியம் என சொல்வாள் என சொல்ல, ஆனால் நாம செய்த நல்லது அவளுக்கு புரியவில்லை எனஜனார்த்தனன் சொல்கிறார். ஆனால் அவளுடன் கயல் இருக்கிறாள் அவங்க கதிர் வீட்டிற்கு தான் போனார்களா அந்த வீடு எப்படி இருக்கிறது என தெரியவில்லை என சொல்கிறார்.

தமிழகத்தில் இன்று (நவ. 16) உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

கதிர் வீடு நன்றாக இருக்காது என ஜனார்த்தனன் சொல்ல, மீனாவை நினைத்து பயமாக இருக்கிறது என கலை சொல்கிறார். பின் இன்னைக்கு நடந்தது ஆரம்பம் தான் இந்த ஜனார்தனனை நினைத்து எப்படி தொழில் செய்கிறார்கள் என நான் பார்க்கிறேன் என ஜனார்த்தனன் சொல்கிறார். பின் அனைவரும் படுக்க மீனா ஐஸ்வர்யா ரூமில் படுக்காமல் இருக்கிறார்கள். முல்லையிடம் அம்மா படுத்துவிட்டதாக சொல்ல, நீங்களும் அவர்களுக்கு அருகே படுத்து கொள்ளுங்கள் என முல்லை சொல்கிறார். ஆனால் பார்வதி பயங்கரமாக குறட்டை விட, மீனா ஐஸ்வர்யா நானும் உங்களுடன் படுத்துக் கொள்கிறேன் என சொல்கிறார்கள். மீனா ஜீவா அருகே தான் படுப்பேன் என சொல்ல, கண்ணன் மாறி படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!