சந்தோசமாக நடந்து முடிந்த பூமி பூஜை.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், புது வீடு கட்ட பூமி பூஜை ஏற்பாடு நடைபெறுகிறது. அப்போது எல்லாரும் மகிழ்ச்சியாக பூஜையை செய்து முடிக்கின்றனர். பின் கஸ்தூரி மீனாவின் அப்பா வரவில்லை என சொல்ல, எல்லாரும் வேண்டாம் என நினைக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அனைவரும் புது வீடு கட்ட பூமி பூஜைக்கு தயாராகி இருக்கின்றனர். அப்போது முல்லை அம்மா பேசாமல் இருக்க தனம் அம்மா வந்து ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய் என கேட்கிறார். அப்போது முல்லை வந்து பார்வதியிடம் நீ எதற்கு அவர்களிடம் பேசுகிறாய் தேவை இல்லாத சண்டை வரும் என சொல்ல, உடனே தனம் அவர்கள் சண்டை போடமாட்டார்கள் நீயும் உன் அம்மாவும் சண்டை போடாமல் இருந்தால் போதும் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் கஸ்தூரி யாருக்கோ வழி சொல்ல, எல்லாரும் யார் வருவதாக பார்க்கிறார்கள். அப்போது மல்லியின் கார் வருகிறது. மல்லியை யார் கூப்பிட்டா என முல்லை கேட்க, பார்வதி மல்லி வந்தால் என்ன என கேட்கிறார். பின் மல்லி இது எத்தனை சென்ட் என கேட்க, 8 சென்ட் என தனம் சொல்கிறார். உடனே மல்லி 8 சென்ட் போல இல்லை என சொல்கிறார். தனம் அம்மா வீடு கட்டும் வரை அங்கே தான் இருக்க போறீங்களா என கேட்க, உடனே முல்லை அம்மா ஏன் அதுவரை இருக்க பெரிய மாளிகை எதுவும் கட்டி வைத்திருக்கிறீர்களா என கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
தனம் அங்கே தான் இருக்க போகிறோம் என சொல்ல, முல்லை பார்வதியை அமைதியாக இருக்க சொல்கிறார். பின் குமரேசன் வர எல்லாரும் அவரை கிண்டல் செய்கின்றனர். கஸ்தூரி மீனாவின் அப்பாவை கூப்பிட வில்லையா என கேட்க, பார்வதி அவரால் தான் எல்லாம் பிரச்சனை என சொல்ல, முல்லை அமைதியாக இருக்க சொல்கிறார். பின் பூமி பூஜை நடைபெறுகிறது. குடும்பத்துடன் சேர்ந்து செங்கல் நட்டு பூஜை நடைபெறுகிறது. எல்லாரும் தம்பதியாக வந்து பூஜையில் கலந்து கொள்கின்றனர். பின் கண்ணன் அனைவருக்கும் காபி கொடுக்கிறார். எல்லாம் நல்லபடியாக நடந்ததை நினைத்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.