ஜீவாவை குடிக்கு அடிமையாக்கிய ஜனார்த்தனன்.. உதவும் குடும்பம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக ஜனார்த்தனன் மாற்றிவிட, அவரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமையாக்குகிறார். அதனால் மீனா நிலைமை திண்டாட்டமாக இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி ஜீவாவை தனது தம்பியே இல்லை என சொல்ல, அதற்கு ஜனார்த்தனன் தான் காரணம் என்பது ஜீவாவிற்கு தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் ஜனார்த்தனன் ஜீவாவை மதிக்காமல் இருப்பது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அவரை குடி போதைக்கு அடிமையாக்குகிறார். ஜீவா சிறிது சிறிதாக மது போதைக்கு அடிமையாக மீனா ஜீவாவை பார்த்து கவலைப்படுகிறார். ஜீவாவை எப்படியாவது மீட்க வேண்டும் என மூர்த்தியிடம் உதவி கேட்கிறார்
உங்கள் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி கிடைக்க வேண்டுமா? – அஞ்சலகம் வழங்கும் அசத்தல் திட்டம்!
தனது தம்பி தவறான வழியில் போகக் கூடாது என்பதால் மூர்த்தி ஜீவாவை மன்னித்து ஏற்றுக் கொள்ள, மீண்டும் குடும்பம் ஒன்று சேர இருக்கிறது. தன்னுடைய திட்டம் எல்லாம் வீணாகிவிட்டது என்பதால் ஜனார்த்தனன் பயங்கர கோவத்தில் இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எப்படியோ பல பிரச்சனைகளுக்கு பின் குடும்பம் ஒன்று சேரும் என்பதில் சந்தேகமில்லை.
Exams Daily Mobile App Download