தமிழக அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – சுற்றறிக்கை வெளியீடு!
தமிழக அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை வெளியீடு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியிலிருந்து தற்போது வரைக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை தற்போது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஜீவாவை குடிக்கு அடிமையாக்கிய ஜனார்த்தனன்.. உதவும் குடும்பம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!
மேலும், அரசு பள்ளியில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதங்களை வரும் மே 31ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்களை ஜூன் 13ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எமிஸ் தளத்திலிருந்து மாற்று சான்றிதழ் பெற்ற பிறகு அந்த மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்துள்ளார்களா என்பதனை கட்டாயமாக பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எமிஸ் தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்யும் செய்த பிறகு மாணவர்களுக்கான விலையில்லா பொருட்களை விநியோகம் செய்வதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.