வீட்டை அப்பாவிற்கு விற்க சொல்லி கோவப்படும் மீனா, தொழிலில் முன்னேற முயற்சி செய்யும் கதிர் – இன்றைய எபிசோட்!

0
வீட்டை அப்பாவிற்கு விற்க சொல்லி கோவப்படும் மீனா, தொழிலில் முன்னேற முயற்சி செய்யும் கதிர் - இன்றைய எபிசோட்!
வீட்டை அப்பாவிற்கு விற்க சொல்லி கோவப்படும் மீனா, தொழிலில் முன்னேற முயற்சி செய்யும் கதிர் - இன்றைய எபிசோட்!
வீட்டை அப்பாவிற்கு விற்க சொல்லி கோவப்படும் மீனா, தொழிலில் முன்னேற முயற்சி செய்யும் கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா வீட்டை என்னுடைய அப்பா வாங்கி கொள்கிறேன் என சொல்வது சரி தான என சொல்ல ஆனால் மூர்த்தி சொந்தத்திற்குள் கொடுக்கல் வாங்கல் வேண்டாம் என சொல்கிறார். மறுபக்கம் கதிர் முல்லை தொழிலில் முன்னேறிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா வீட்டை என்னிடம் கொடுங்கள் என சொல்லிவிட்டு கிளம்ப மீனாவும் என் அப்பாவிற்கு கொடுக்க வேண்டும் என சொல்கிறார். மூர்த்தி சொந்தத்திற்குள் கொடுக்கல் வாங்கல் வேண்டாம் என சொல்ல அவங்க பணம் கொடுக்க போகிறார். நாம எழுதி கொடுக்க போகிறோம் என மீனா சொல்கிறார். ஆனால் மூர்த்தி பணம் கூட குறைய இருந்தாலும் வெளியே கொடுத்தால் தான் சரியாக வரும் என சொல்ல, மீனா அவர் வீடு தேடி வந்து வீட்டை கேட்கிறார் அவருக்கு என்ன பதில் சொல்வது என மீனா கேட்கிறார். பின் மூர்த்தி நான் உன் அப்பாவிடம் பேசிக் கொள்கிறேன் என சொல்கிறார்.

மறுபக்கம் முல்லையிடம் அவருடைய அப்பா அளவாக சமைத்து வைத்திருப்பதாக கேட்க ஆமாம் என முல்லை சொல்கிறார். உடனே முல்லை அப்பா அதான் சரி என சொல்ல, அப்போது ஒரு கஸ்டமர் பூரி கேட்டு வருகிறார். ஆனால் கதிர் இன்று பூரி போடவில்லை என சொல்ல எங்களுக்கு பூரி தான் வேண்டும் என சொல்கிறார். பின் மல்லி இப்பவே 10 நாள் ஆகிவிட்டது என சொல்ல, நாங்க இன்று அசைவம் போட போகிறோம் என சொல்ல மல்லி தக்காளி சாப்பாட்டை வாங்கவே ஆள் இல்லை அப்பறம் என்ன என கேட்கிறார். பின் இப்பவே 10 நாள் ஆகிவிட்டது இன்னும் 20 நாட்களில் என்ன செய்ய போகிறார்கள் என கேட்கிறார். உடனே கதிர் இன்னும் 20 நாள் இருக்கிறதா ரொம்ப சந்தோசம் என சொல்கிறார்

அதற்குள் நிறைய செய்யலாம் என கதிர் சொல்ல, முல்லையும் நம்பிக்கையுடன் இருக்கிறார். மறுபக்கம் தனம் ஜீவாவை கடைக்கு கிளம்ப சொல்ல, மீனா சாப்பாடு கொடுப்பதாக சொன்னதாக சொல்கிறார். அப்போது மீனா வந்து பாத்திரத்தை வேகமாக வைக்க என்ன ஆச்சு என ஜீவா கேட்கிறார் தனமும் ஜீவா எதாவது சொன்னானா என கேட்க, நான் நேராக கேட்கிறேன் என் அப்பாவிற்கு வீட்டை கொடுத்தால் என்ன கஷ்டம் என மீனா கேட்கிறார். உடனே தனம் சொந்தக்காரர்களுக்குள் அப்படி கொடுக்க கூடாது என சொல்ல, வெளியே கொடுப்பவர்கள் நல்ல விலைக்கு வந்தால் நம்மை இங்கே இருக்க விடாமல் இருக்காங்க என் அப்பா எல்லாத்துக்கும் சரி என சொல்வதாக சொல்கிறார் அப்பறம் என்ன என மீனா கேட்கிறார்.

இனியாவை தேடி அலையும் பாக்கியா, உண்மையை மறைத்த செழியன் – இன்றைய எபிசோட்!

சொந்தக்காரர்களுக்கு மத்தியில் வாங்கினால் நாம வீட்டை காலி செய்வதாக சொல்லிவிட்டு வேற தேதி சொன்னால் மன சங்கடம் ஏற்படும் என சொல்கிறார். ஐஸ்வர்யாவும் ஜீவாவும் அது தான் சரி என சொல்ல, மீனா கோவித்து கொண்டு செல்கிறார். மறுபக்கம் கதிர் பிரியாணி சமைக்க மல்லி வாசனை நன்றாக இருப்பதாக சொல்கிறார். முதலில் ஆள் வர வேண்டும் என சொல்லி மல்லி முல்லை அம்மா கிண்டல் செய்கின்றனர். பின் கதிர் முல்லை சாப்பாட்டை கொடுத்து எப்படி இருக்கிறது என பார்க்க சொல்கின்றனர். சாப்பாடு நன்றாக இருப்பதாக மல்லி சொல்ல, இருவர் கடைக்கு சாப்பிட வருகின்றனர். அவரிடம் கதிர் சாப்பாடு இருப்பதாக சொல்ல நாங்க சைவம் என சொல்லி அவர்கள் கிளம்புகின்றனர்.

மல்லி அதை பார்த்து கிண்டல் செய்து சிரிக்கிறார். முல்லை மல்லி கிண்டல் செய்வதை பார்த்து வருத்தப்பட அப்போது சிலர் சாப்பிட வருகின்றனர். அவர்களிடம் கதிர் சிக்கன் பிரியாணி இருப்பதாக சொல்ல, இங்கே சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். இன்னைக்கு சாப்பாடு செய்யவில்லை என கதிர் சொல்ல, பிரியாணி நன்றாக இருக்கும் என சொல்கிறார். விலை அதிகமாக இருக்குமே என சொல்ல, சாப்பாடும் அதுவும் ஒரே விலை தான் என சொல்கிறார். மல்லி அதை கேட்டு அதிர்ச்சி அடைய வந்தவர்கள் சாப்பிட கொடுக்க சொல்கின்றனர். முல்லை அப்பா அது எப்படி கட்டுப்படியாகும் என கேட்க வீணாகிவிடுவதற்கு சாப்பிடட்டும் என சொல்கிறார்.

பின் மீனா ஐஸ்வர்யாவின் பார்லருக்கு கஸ்டமர் ஒருவரை அழைத்து வருகிறார். அவர் புருவம் ஒழுங்கு படுத்தினால் போதும் என சொல்ல ஆனால் மீனா முடி வெட்டிக் கொள்ளும்படி சொல்கிறார்.பின் ஐஸ்வர்யா அவருக்கு எல்லாம் செய்துவிடுகிறார். தனம் அதை பார்த்து ஐஸ்வர்யா நன்றாக வேலை செய்கிறாள் என சொல்ல, மீனா முடி எல்லாம் சமையல் அறைக்குள் போவதாக சொல்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என தனம் சொல்ல ஐஸ்வர்யா அழகாக செய்து முடித்திருக்கிறார். கஸ்டமரும் அதை பார்த்து சரி என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா 240 ரூபாய் ஆகிவிட்டது என சொல்ல, என்ன இவ்வளவு காசு கேட்கிறாய் என கஸ்டமர் சொல்லிவிட்டு 100 ரூபாய் கொடுத்துவிட்டு திட்டிவிட்டு செல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!