இனியாவை தேடி அலையும் பாக்கியா, உண்மையை மறைத்த செழியன் – இன்றைய எபிசோட்!

0
இனியாவை தேடி அலையும் பாக்கியா, உண்மையை மறைத்த செழியன் - இன்றைய எபிசோட்!
இனியாவை தேடி அலையும் பாக்கியா, உண்மையை மறைத்த செழியன் - இன்றைய எபிசோட்!
இனியாவை தேடி அலையும் பாக்கியா, உண்மையை மறைத்த செழியன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவை காணாமல் பாக்கியாவும் ஜெனியும் பதட்டம் அடைகின்றனர். செழியன் கோபிக்கு போன் செய்ய இனியா தன்னுடன் இருப்பதை செழியன் சொல்கிறார். ஆனால் அவர் ஈஸ்வரி தவிர வேறு யாரிடமும் சொல்லாமல் இருக்க, செல்வியும் பாக்கியாவும் இனியாவை தேடி அலைகின்றனர்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூல் விட்டு வர நேரமாகிவிட்டதால் பாக்கியா பதட்டம் அடைகிறார். ஈஸ்வரி எல்லாம் இவளால் தான் என சொல்ல, தாத்தா நீ ஸ்கூலிற்கு சென்று பார்த்துவிட்டு வா என சொல்கிறார். பாக்கியா கிளம்ப செல்வியும் உடன் வருவதாக சொல்கிறார். பின் குடும்பத்தில் அனைவரும் பதட்டமாக இருக்கின்றனர். மறுபக்கம் கோபி இனியாவிற்கு ஐஸ் வாங்கி கொடுத்து சந்தோசப்படுத்துகிறார். பின் இனியா நீங்க தான் பெஸ்ட் டாடி என சொல்கிறார். இதை தான் நான் மிஸ் செய்கிறேன். இதுவே அம்மாவாக இருந்தால் அவங்களுக்கு தோன்றியதை வாங்கி கொடுத்து பேசியே சாப்பிட வைத்திருப்பார் என சொல்கிறார். பின் கோபி இப்போது ஏன் அவளை பற்றி பேசுகிறாய் உனக்கு ஐஸ் வேணுமா என கேட்க இனியா அதெல்லாம் வேண்டாம் எனக்கு ஒன்று மட்டும் பண்ணுங்க என சொல்கிறார்.

என்னது என கேட்க, என்னை உங்க கூடவே கூட்டிக் கொண்டு போங்க என சொல்கிறார். கோபி சீக்கிரம் நல்ல வீடு பார்த்துவிட்டு நான் கூட்டிக் கொண்டு செல்கிறேன் என சொல்கிறார். பின் செழியனுக்கு கோபி போன் செய்கிறார். செழியன் வருத்தத்துடன் எப்படி இருக்கீங்க என கேட்க நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் செழியன் எப்படி இருப்பதாக கேட்க நன்றாக இருக்கேன் நீங்க இல்லாமல் கஷ்டமாக இருப்பதாக சொல்கிறார். எனக்கும் உன்னை இனியா அப்பா அம்மாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை என சொல்ல, இப்போது கூட இனியாவை நான் தான் அழைத்து கொண்டு வந்திருக்கேன் வீட்டில் தேட போறார்கள் நீ சொல்லிவிடு என கோபி சொல்கிறார். செழியன் சரி நான் சொல்லிவிடுகிறேன் என சொல்கிறார்.

மறுபக்கம் பாக்கியா ஸ்கூலிற்கு வந்து என் மகள் வீட்டிற்கு இன்னும் வரவில்லை கொஞ்சம் தேடி பாருங்கள் என சொல்ல, ஆனால் வாட்ச் மேன் உள்ளே யாருமில்லை என சொல்கிறார். பாக்கியா பஸ்ஸில் ஏறவில்லை என ட்ரைவர் சொல்கிறார் கொஞ்சம் சென்று பாருங்க என சொல்ல, செல்வி பெண்ணை காணவில்லை என பதட்டமாக வந்திருப்பதாக சொல்லி சத்தம் போடுகிறார். பின் வாட்ச் மேன் சென்று பாருங்கள் என சொல்ல டீச்சர் இனியா வெளியே போனதை நான் பார்த்தேன் என சொல்கிறார். அவள் வேறு பக்கமாக வந்திருப்பாள் வீட்டிற்கு இந்நேரம் சென்று இருப்பாள் நீங்க சென்று பாருங்கள் என டீச்சர் சொல்ல பாக்கியா சரி என கிளம்புகிறார்.

பின் பாக்கியா போகிற வழி எல்லாம் சென்று கொண்டிருக்க பாக்கியா என் பெண்ணிற்கு எதுவும் ஆக கூடாது என சொல்கிறார். செல்வி அதெல்லாம் ஒன்றும் ஆகாது என சொல்ல, அது எப்படி செல்வி பஸ் ட்ரைவர் வண்டியில் ஏறவில்லை என சொல்கிறார். டீச்சர் வெளியே போனதாக சொல்கிறார் என்ன ஆச்சு என தெரியவில்லை என பாக்கியா பதட்டப்படுகிறார். பின் ரோட்டில் இனியா போல ஒரு பெண் செல்ல ஆனால் அது இனியா இல்லை. உடனே பாக்கியா இனியாவை காணவில்லை என அழுகிறார். செல்வி அழாதே அக்கா இனியா வீட்டிற்கு சென்று இருப்பாள் என சொல்ல, பாக்கியாவிற்கு பதட்டத்தில் மயக்கமாக இருக்கிறார். உடனே செல்வி தண்ணீ வாங்கி கொடுக்கிறார்.

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு நாளை (செப்.07) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ!

பின் செல்வி பாக்கியா வீட்டிற்கு வருகின்றனர். மறுபக்கம் செழியன் வீட்டிற்கு வர ஜெனி இனியாவை காணவில்லை என்ற விஷயத்தை சொல்கிறார். ஆனால் செழியன் உண்மை தெரிந்தும் சொல்லாமல் இருக்கிறார். இனியா வந்துவிடுவாள் நீ காபி போட்டு கொடு எனக்கு தலைவலியாக இருப்பதாக செழியன் சொல்ல, நான் என்ன பேசுகிறேன் ஆனால் அதை பற்றி நினைக்காமல் காபி கேட்கிறாய் என ஜெனி சொல்கிறார். பின் ஈஸ்வரி செழியனிடம் இனியா இன்னும் வரவில்லை என சொல்ல செழியன் அப்பா உடன் தான் அவள் இருக்கிறாள் என சொல்கிறார். செல்வி அதை கேட்டு நிம்மதியாக இருக்கிறார். ஆனால் தாத்தா மற்றும் ஜெனியிடம் அது பற்றி செழியன் சொல்லாமல் இருக்கிறார்

தாத்தா செழியனை இனியாவை காணாமல் தேடாமல் இப்படி காபி குடிக்கிறாய் என கேட்க எனக்கு டென்ஷன் என செழியன் சொல்கிறார். இனியாவை காணாமல் பதட்டம் இல்லாமல் இருக்கிறாய் என கேட்க அதெல்லாம் அவள் வந்துவிடுவாள் என செழியன் சொல்கிறார். பின் ஜெனி பாக்கியாவை தேடி பதட்டமாக இருக்க பாக்கியா வந்ததும் இனியா எங்கே என கேட்கிறார். என்ன இனியா இங்கையும் வரவில்லையா என பாக்கியா கேட்டு பதட்டம் அடைகிறார்.அப்போது கோபி கார் வந்து நிற்க இனியா அதில் வந்து இறங்குகிறார். பாக்கியா அதை பார்த்து கோபப்படுகிறார்

உடனே ஜெனி இனியாவிடம் சென்று வெளியே சென்றால் போன் செய்து சொல்லமாட்டீயா என கேட்கிறார். உன்னை காணாமல் நாங்க எவ்வளவு பதட்டமாக இருந்தோம். உன்னை காணாமல் நாங்க போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுக்கலாம் என இருந்தோம் என ஜெனி இனியாவிடம் சத்தம் போடுகிறார். உடனே கோபி ஏன் ஜெனி குழந்தையை திட்டுகிறாய் அவள் என்னுடன் தான் இருந்தாள் என சொல்கிறார். போங்க ஜெனி அக்கா நீங்களும் இப்போ எல்லாம் அம்மா மாதிரியே பேசுவதாக இனியா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!