சமையல் போட்டிக்கு போக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் முல்லை, வீட்டிற்கு வந்த மூர்த்தி குடும்பம் – இன்றைய எபிசோட்!

0
சமையல் போட்டிக்கு போக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் முல்லை, வீட்டிற்கு வந்த மூர்த்தி குடும்பம் - இன்றைய எபிசோட்!
சமையல் போட்டிக்கு போக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் முல்லை, வீட்டிற்கு வந்த மூர்த்தி குடும்பம் - இன்றைய எபிசோட்!
சமையல் போட்டிக்கு போக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் முல்லை, வீட்டிற்கு வந்த மூர்த்தி குடும்பம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிரை சமையல் போட்டிக்கு போக வேண்டும் என இரவெல்லாம் கெஞ்ச ஆனால் கதிர் வேண்டாம் என உறுதியாக இருக்கிறார். மறுபக்கம் மூர்த்தி குடும்பத்துடன் வீட்டிற்கு வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் இரவு தூங்கிவிட முல்லை அவரை எழுப்புகிறார். ஆனால் கதிர் எழுந்திருக்காமல் இருக்க, என்ன இப்படி தூங்குறீங்க என முல்லை கேட்கிறார். மாமா மாமா என முல்லை கூப்பிட கதிர் எழுந்து என்ன வேண்டும் உனக்கு என கேட்கிறார். எனக்கு தூக்கமே வரவில்லை என முல்லை சொல்ல, கண்ணனை மூடி தூங்கு தூக்கம் வரும் என சொல்கிறார். மனதில் ஒரு விஷயம் உறுத்தி கொண்டே இருக்கிறது. அப்பறம் எப்படி தூக்கம் வரும் என முல்லை சொல்ல, கதிர் எதுனாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

முல்லை கதிரை எழுப்பி டீ குடிக்கிறீங்களா என கேட்க, தூங்குறவனை எழுப்பி யாராவது டீ கொடுப்பார்களா என கேட்கிறார். பின் முல்லை எதிர் வீட்டு அக்கா வந்தாங்க அவங்க நம்ம சமையல் தான் ஊர் முழுவதும் நன்றாக இருப்பதாக சொல்வதாக சொல்கிறார். பின் முல்லை அந்த போட்டி பற்றி கேட்க, கதிர் நினைத்தேன் என் சொல்கிறார். முல்லை அந்த போட்டிக்கு போனால் ஒரே நாளில் நாம் பிரபலமாகிவிடலாம் என சொல்கிறார். கதிர் புரோட்டா தூக்கி போட்டு பிரபலமானதற்கே நம்மளால் முடியவில்லை என சொல்கிறார். பின் கதிர் அங்கே தெரியாத விஷயங்களை சமைக்க சொன்னால் என்ன ஆகும் என கேட்க, அங்கே சமையல் போட்டி மட்டும் இல்லை என முல்லை சொல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

ஜோடி பொறுத்தம் போட்டி எல்லாம் இருப்பதாக சொல்ல, ஆனால் கதிர் முடியாது என சொல்கிறார். பின் கதிர் தூங்கிவிட ஆனால் முல்லை தூங்காமல் இருக்கிறார். உனக்கு தேவை என்றால் நீ மட்டும் போ என சொல்ல, கணவன் மனைவி சேர்ந்து தான் போக வேண்டும் என முல்லை சொல்கிறார். பின் முல்லை தூங்காமல் அந்த போட்டிக்கு அப்ளை செய்ய, கதிர் எழுந்து என்ன செய்கிறாய் என கேட்கிறார். ஒன்றுமில்லை என சொல்ல, அந்த போட்டி பற்றி தான் நினைத்து கொண்டிருக்கிறாய் என கேட்கிறார். பின் முல்லை அது நமக்கான போட்டி அதில் 10 லட்சம் வந்தால் நாம பணத்தை கொடுத்துவிட்டு நம்ம வீட்டிற்கு சென்று விடலாம் என சொல்கிறார். அதெல்லாம் சரியாக வராது என கதிர் சொல்கிறார்.

பாரதியுடன் திருமணத்திற்கு தயாராகும் வெண்பா? டிஎன்ஏ ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் பாரதி? – பாரதி கண்ணம்மா உச்சகட்ட பரபரப்பு!

மறுபக்கம் மீனா ஜீவா தூங்கி கொண்டிருக்க, மூர்த்தி, தனம், கண்ணன், ஐஸ்வர்யா வருகின்றனர். அவர்கள் வந்து வீட்டு கதவை தட்ட ஆனால் மீனாவும் ஜீவாவும் எழுந்திரிக்கவில்லை. அவர்கள் கதவை தட்டிக் கொண்டே இருக்க, ஆனால் கதவு திறக்கவில்லை. மீனா சத்தம் கேட்டு எழுந்து பார்க்க சொல்ல ஆனால் ஜீவா போகாமல் இருக்கிறார். பின் கண்ணன் பின் வாசல் வழியாக சென்று பார்க்க அப்போது கதவு திறந்து இருக்கிறது. கண்ணன் உள்ளே வந்து கதவை திறந்துவிடுகிறார். பின் மீனாவை எழுப்ப, மீனா எழுந்து வந்து எப்படி வந்தீங்க என கேட்கிறார். பின் வாசல் மூடாமல் இருப்பதாக தனம் சொல்ல. மறந்துவிட்டதாக மீனா சொல்கிறார். பின் கொடைகானலிற்கு பாக்கியா வந்ததை பற்றி தனம் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!