ஜனார்தனனின் திட்டத்தை பற்றி சொன்ன கஸ்தூரி.. பழைய கடையை மீண்டும் திறந்து வைத்த தனம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கஸ்தூரி வீட்டிற்கு வர மூர்த்தியிடம் உங்க கடை பிரச்சனைக்கு ஜனார்த்தனன் தான் காரணம் என சொல்கிறார். மீனா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா ஹோட்டலில் இருந்து வீட்டிற்கு வர அப்போது மூர்த்தி ஹோட்டல் வேலைகளை பற்றி கேட்கிறார். மீனா ஹோட்டலில் நல்ல கூட்டம் என சொல்ல, அவர்கள் சமாளித்துவிடுவார்களா என கேட்கிறார். அதெல்லாம் சமாளித்துவிடுவார்கள் என மீனா சொல்ல, தனம் கஸ்தூரி மற்றும் மல்லி வந்ததை பற்றி சொல்கிறார். அப்போது கஸ்தூரி வர, கடையை பற்றி கேட்கிறார். மூர்த்தி என்ன செய்வது எல்லாம் நடந்துவிட்டது என சொல்ல, உடனே கஸ்தூரி எல்லாத்துக்கும் யார் காரணம் என உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா என கேட்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
அப்போது கஸ்தூரி எல்லாத்துக்கும் மீனாவின் அப்பா தான் காரணம் என சொல்கிறார். மீனா அதை கேட்டு அதிர்ச்சி அடைய, என்ன சொல்றீங்க என கேட்கிறார். நான் இப்போது தான் மல்லி உடன் சென்றுவிட்டு வருகிறேன். அப்போது எங்க முன்னாடி தான் அவர் சொன்னதாக கஸ்தூரி சொல்கிறார். அப்பாக்கு எப்படி ஆபிசர் எல்லாம் தெரியும் என மீனா கேட்க, உன் அப்பா தனியாக செய்யவில்லை, கண்ணன் அலுவலகத்தில் அவனால் ஒரு பொம்பளைக்கு வேலை போனதே, அவருடைய கணவரை வைத்து தான் மீனாவின் அப்பா எல்லா வேலைகளையும் செய்ததாக சொல்கிறார்.
மூர்த்தி அதை கேட்டு அதிர்ச்சி அடைய, அப்போ நம்ம மீது தவறு இல்லையா என தனம் சொல்கிறார். என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை என மூர்த்தி சொல்ல, மீனா என் அப்பா ஏன் இப்படி செய்கிறார், என்னை மன்னித்துவிடுங்கள் என சொல்கிறார். மூர்த்தி அவர் செய்ததற்கு நீ என்ன செய்வாய் விடு பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் பழைய கடையில் பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் கடையை எப்போது திறக்க போகிறோம் என கேட்க, கஷ்டப்பட்டு உழைக்கும் நமக்கு எல்லாம் நல்ல நாள் தான், நாளைக்கே கடையை திறக்கலாம் என சொல்கிறார்.
பாக்கியாவின் கேன்டீன் ஆர்டரை கெடுத்த ராதிகா.. ராதிகாவுடன் சண்டை போட்ட இனியா – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
பின் கதிரும் ஜீவாவும் வீட்டில் இருக்க, மீனா யாரையோ எதிர்பார்த்து இருக்கிறார். அப்போது ஜீவா என்ன எதாவது தவறு செய்தாயா என கேட்க, அதெல்லாம் இல்ல யாரவது வருகிறார்களா என பார்ப்பதாக சொல்கிறார். பின் மீனா கடையை மூட யார் காரணம் என தெரியுமா என கேட்க, ஜீவா உன் அப்பாவா என விளையாட்டுக்கு சொல்கிறார். ஆனால் மீனா நீ சும்மா சொன்னாலும் அது தான் உண்மை என சொல்கிறார். அதை கேட்டு கதிர் ஜீவா கோவப்படுகிறார்கள். அவருக்கு நாம வீட்டை காலி செய்தது போதாதா என கேட்கிறார். என் அப்பா எல்லாம் பண்ணிவிட்டு மல்லியிடம் சொன்னதாக சொல்கிறார்.
அப்போது தனம் வர, மீனாவிடம் யாரிடமும் சொல்ல வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். ஆனால் மீனா இவர்களிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை என சொல்கிறார். கதிர் இதை சும்மா விடக் கூடாது என சொல்ல, தனம் நீங்க சும்மா இருங்க அவரிடம் சண்டை போட வேண்டாம் என சொல்கிறார். கதிர் அண்ணனிற்கு தெரிந்தால் எப்படி வருத்தப்படும் என கேட்க, அண்ணனிற்கு எல்லாம் தெரியும் என தனம் சொல்கிறார். இவ அப்பா செய்த காரியத்திற்கு அவரை சும்மா விட கூடாது என ஜீவா சொல்ல, தனம் அவங்க அவங்க செய்த காரியத்திற்கு அனுபவிப்பார்கள் என சொல்கிறார். மறுநாள் பழைய கடையை தனம் திறந்து வைக்கிறார். பின் முதல் வியாபாரத்தை தனம் ஆரம்பிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.