பாக்கியாவின் கேன்டீன் ஆர்டரை கெடுத்த ராதிகா.. ராதிகாவுடன் சண்டை போட்ட இனியா – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவின் கேன்டீன் ஆர்டரை கெடுத்த ராதிகா.. ராதிகாவுடன் சண்டை போட்ட இனியா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவின் கேன்டீன் ஆர்டரை கெடுத்த ராதிகா.. ராதிகாவுடன் சண்டை போட்ட இனியா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவின் கேன்டீன் ஆர்டரை கெடுத்த ராதிகா.. ராதிகாவுடன் சண்டை போட்ட இனியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா லோன் கிடைத்த சந்தோசத்தை பற்றி குடும்பத்தினரிடம் சொல்கிறார். பின் புது கேட்டரிங் ஆர்டர் வாங்க பணத்தை கொடுக்க செல்கிறார். அப்போது அங்கே வந்த ராதிகா மேல் அதிகாரியிடம் இவங்களுக்கு கேட்டரிங் ஆர்டர் கொடுக்க வேண்டாம் என சொல்கிறார். பின் இனியா ராதிகா இடையே சண்டை வருகிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா லோன் கிடைத்த சந்தோஷத்தில் வீட்டிற்கு வந்து நடந்ததை எல்லாம் சொல்கிறார். ராஜசேகர் சார் பைனான்ஸ் கம்பெனி ஒன்று நடத்தி வருகிறார். அதன் மூலம் எனக்கு பணம் கொடுத்ததாக பாக்கியா சொல்கிறார். வட்டி எல்லாம் எப்படி என ஈஸ்வரி கேட்க, பேங்க் விட அதிகம் தான் என பாக்கியா சொல்கிறார். சொத்து இல்லாமல் பணம் கிடைத்ததே பெரிய விஷயம் என செல்வி சொல்ல, அதான் நானும் நினைக்கிறேன் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியா எழில் உடன் சென்று பணத்தை கொடுக்க செல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

பாக்கியா புது அலுவலகத்தில் கேன்டீனில் உக்காந்து எழில் உடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது எழில் பாக்கியாவை போட்டோ எடுக்கிறார். அப்போது அந்த அலுவலக மேல் அதிகாரி வருகிறார். அவரிடம் பாக்கியா எழிலை அறிமுகம் செய்து வைக்கிறார். பின் இது தான் நம்ம கேன்டீன் இதை நீங்க தான் நடத்த வேண்டும் என சொல்கிறார். பின் முன்னாடி இந்த கேன்டீன் நடத்தியவர் விலகிவிட்டார். அதன் பின் ஹோட்டலில் இருந்து தான் சாப்பாடு வருவதாக அந்த அதிகாரி சொல்கிறார். பின் பாக்கியா பணத்தை கொடுக்கிறார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகா அதை பார்த்துவிடுகிறார்.

அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற போது பாக்கியா பேசியது எல்லாம் ராதிகாவுக்கு நியாபகம் வருகிறது. பாக்கியா எழில் கேன்டீனை பார்த்துக் கொண்டிருக்க, ராதிகா அந்த அதிகாரியிடம் சென்று இவங்க சரியாக எதுவும் செய்யமாட்டார்கள் என சொல்கிறார். எனக்கும் இருக்கும் வேலையில் சாப்பாடு விஷயத்தில் நான் எதுவும் செய்ய முடியாது என சொல்கிறார். உடனே அந்த அதிகாரி வேற ஆளை பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். ராதிகா பாக்கியாவை பழி வாங்கியதை நினைத்து சந்தோசப்படுகிறார். மறுபக்கம் இனியா மயூரா போன் பார்த்துக் கொண்டிருக்க ராதிகா சென்று படிக்க சொல்கிறார்.

அப்போது இனியா காதில் வாங்காமல் இருக்க இனியா போனை வாங்கி தூக்கி எறிகிறார் ராதிகா. இப்ப எதற்கு என் போனை வாங்குனீங்க என கேட்க, கோபி என்னை நம்பி தான் அனுப்பி இருக்காங்க என சொல்ல, உங்க வேலையை பாருங்க என இனியா சொல்கிறார். உங்க அம்மா மரியாதை சொல்லி கொடுத்து வளர்க்கவில்லையா என கேட்க, என் அம்மா யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என சொல்லி இருப்பதாக சொல்கிறார். பின் ராதிகா இனியாவை அடிக்க கை ஓங்க ஆனால் இனியா ராதிகா கையை பிடித்துவிடுகிறார். என் அப்பாவிடம் சொன்னால் என்ன ஆகும் என தெரியுமா பார்த்து இருங்க என இனியா சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ஓய்வூதியதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – பென்ஷன் 10% அதிகரிப்பு! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!

மறுபக்கம் பாக்கியா கேன்டீனுக்கு தேவையான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை செய்வாய் என கேட்கிறார். அப்போது எழில் அதெல்லாம் செய்துவிடலாம் என சொல்கிறார். பாக்கியா கேன்டீன் தேவையான பொருள்களை எல்லாம் இன்று வாங்கியதாக சொல்கிறார். அப்போது ஈஸ்வரி அப்போ நிறைய செலவாகி இருக்கும் என சொல்ல, ஆமாம் என பாக்கியா சொல்கிறார். இவ்வளவு செலவு பண்ண வேண்டுமா என கேட்க, எழில் பிசினஸ் என்றால் அப்படி தான் இருக்கும் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!